முகப்பு
இந்தியா

பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டது: டேவிட் ஹேட்லி வாக்குமூலம்

பாகிஸ்தான் - அமெரிக்க பயங்கரவாதியாக இருந்து அப்ரூவராக மாறிய குற்றவாளி டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில், சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Updated On : 24 மார்ச், 2016 at 10:57 AM
பகிர்:

பாகிஸ்தான் - அமெரிக்க பயங்கரவாதியாக இருந்து அப்ரூவராக மாறிய குற்றவாளி டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில், சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.

டேவிட் ஹேட்லியிடம், அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி மூலமாக குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய குறுக்கு விசாரணையின் போது, டேவிட் ஹேட்லி கூறியதாவது, சிவ சேனாத் தலைவர் பால் தாக்கரேவைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக நான் அறிந்தேன். அவரைக் கொல்ல முயற்சி செய்து கைது செய்யப்பட்ட நபர், போலிஸ் காவலில் இருந்து தப்பித்துவிட்டார் என்று தெரிவித்தார்.

Advertisement

வழக்குரைஞர் அப்துல் வாஹப் கானின் கேள்விகளுக்கு இரண்டாவது நாளாக பதிலளித்த டேவிட் ஹேட்லி இதனைக் கூறினார்.

சிவ சேனா அலுவலகத்துக்கு எத்தனை முறை சென்றீர்கள், அதன் நோக்கம் என்ன என்று வழக்குரைஞர் கான் கேட்டதற்கு, சிவ சேனா அலுவலகத்துக்கு இரண்டு முறை சென்றுள்ளேன், எல்இடி அமைப்பினர் தாக்கரேவை கொல்ல சதி திட்டம் தீட்டுவதற்காக இந்த பயணம் அமைந்தது என்று ஹேட்லி கூறியுள்ளார்.

யாருடைய உத்தரவின் பேரில் சென்றீர்கள் என்ற கேள்விக்கு, பாகிஸ்தானில் இருந்து, எல்இடி மேற்பார்வையாளர் சஜித் மிர்ரிடம் இருந்து உத்தரவு வந்தது என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.