முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் மக்களவை சபாநாயகர்!

விரைவில் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை  சுமுகமாக நடத்துவதன் பொருட்டு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

புதுதில்லி: விரைவில் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை  சுமுகமாக நடத்துவதன் பொருட்டு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்கால கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல எதிர்க்கட்சிகள் தற்பொழுது ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவைத்தால், கூட்டத்தொடர் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நிலைமையை சமாளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் மூத்த எம்.பிக்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →