முகப்பு
இந்தியா

மலப்புரம் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு!

கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு... 

இந்தியா

மலப்புரம் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு கேரள முதல்வர் உத்தரவு!

கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் கடந்த 24-ம் தேதியன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பலியான விவகாரத்தில் நீதி விசாரணைக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. மேலும் அவர்கள் தொடர் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24-ம் தேதியன்று மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஷங்கர் என்னும் தேவராஜ் மற்றும் காவேரி என்னும் அனிதா ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் போலீசாரின் போலி என்கவுன்ட்டராக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. காவல்துறை மீது குற்றம்சாட்டிய மனித உரிமை ஆர்வலர்கள் இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி மாநில குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹெரா நேற்று உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில், நிலம்பூர் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →