உரி தாக்குதல்: மோடி-பிரணாப் சந்திப்பு!
உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Advertisement
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.