முகப்பு
இந்தியா

மும்பை உரண் நகரில் நடமாடிய மர்ம நபர்களின் கணினி வரைபடங்கள்: காவல் துறை வெளியிட்டது!

மும்பைக்கு அருகில் உள்ள உரண் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு நபர்களின் கணினி வரைபடங்களை காவல்துறை வெளிட்டுள்ளது.

இந்தியா

மும்பை உரண் நகரில் நடமாடிய மர்ம நபர்களின் கணினி வரைபடங்கள்: காவல் துறை வெளியிட்டது!

மும்பைக்கு அருகில் உள்ள உரண் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு நபர்களின் கணினி வரைபடங்களை காவல்துறை வெளிட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:38 AM
பகிர்:

மும்பைக்கு அருகில் உள்ள உரண் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆயுதங்களுடன் நடமாடிய இரு நபர்களின் கணினி வரைபடங்களை காவல்துறை வெளிட்டுள்ளது.

மும்பைக்கு அருகில் கடற்படைத் தளம் அமைந்துள்ள உரண் நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 5-6 மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடியதாக பள்ளி மாணவர்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்து மும்பை கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, மும்பையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இருந்து மும்பை கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மும்பை கடற்கரையையொட்டி உள்ள கேட்வே ஆஃப் இந்தியா, ஆளுநர் மாளிகை, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கவனித்ததாகக் கூறிய 4 மர்ம நபர்களைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் கூறியதை வைத்துஉருவாக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய இரு நபர்களின்  கணினி வரைபடங்கள் வெளியிடப்பட்டன. மீதமுள்ள  நபர்களின் வரைபடங்களும் விரைவில் வெளியிடபப்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பையைச் சுற்றி பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →