இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: கர்நாடக அரசு திட்டவட்டம்

DIN

புது தில்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரை இன்று முதல் மூன்று நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்து ஒருமனமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தில்லியில் நாளை நடைபெற உள்ள இருமாநில அதிகாரிகள் சந்திப்பிற்குப் பிறகே தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT