இந்தியா

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ முகாம்கள் அழிப்பு

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் முகாமிட்டிருந்த பல தீவிரவாத குழுக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களைக் காக்க நாங்களும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT