இந்தியா

சத்தீஸ்கர் தாக்குதலில் பலியான 4 தமிழக வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

DIN

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில்  நேற்று மாலை மாவோயிச பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மத்திய சிறப்புக் காவல்படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மரணமடைந்த 25 பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சாவூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்டம் பெரியப்பூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT