சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் முன்வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பிறகு அதுகுறித்த தன் கருத்துகளைத் தொடர்ந்து ட்விட்டரில் தெரிவித்துவந்தார். இந்நிலையில் 25 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.