இந்தியா

நக்ஸல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் கம்பீர்!

சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்...

எழில்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்நிலையில் சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் முன்வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பிறகு அதுகுறித்த தன் கருத்துகளைத் தொடர்ந்து ட்விட்டரில் தெரிவித்துவந்தார். இந்நிலையில் 25 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT