இந்தியா

நக்ஸல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் கம்பீர்!

சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்...

எழில்

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினார்கள். கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர். சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்நிலையில் சமீபத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேரின் குடும்பத்துக்கு உதவி செய்ய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் முன்வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற பிறகு அதுகுறித்த தன் கருத்துகளைத் தொடர்ந்து ட்விட்டரில் தெரிவித்துவந்தார். இந்நிலையில் 25 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கம்பீர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT