மணிப்பூரில் இன்று செவ்வாய்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை காலை 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ஆகப் பதிவாகியிருந்தது.
பூமியின் மேற்பரப்புக்கு 35 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.