இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள், 2

ANI

புல்வாமா: காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள், 2 போலீஸார் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 4:30 மணியளவில் புல்வாமா மாவட்ட எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 4 மத்திய பாதுகாப்பு படை வீரரும், மற்றொரு போலீஸாரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT