முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவருடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:


புது தில்லி: தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வலியுறுத்தினர்.

திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிகேஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி,  திருச்சி சிவா, இடது சாரி எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.

அப்போது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தனர்.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான வழக்குகள் மற்றும் தீர்ப்புகளையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →