இந்தியா

ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: யாத்ரீகர்கள் 9 பேர் பலி

DIN

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாத்ரீகர்கள் 9 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உதய்பூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
குஜராத்தில் இருந்து யாத்ரீகர்களுடன் தனியார் பேருந்து ஒன்று உதய்பூர் மாவட்டத்துக்கு வந்துகொண்டிருந்தது. நெஹ்லா எனும் கிராமம் அருகே அந்தப் பேருந்து சனிக்கிழமை வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை திருப்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்தது.
இவ்விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் காண்பதற்காக குஜராத்தில் இருந்து அவர்கள் வந்துள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் நேரிட்டுவிட்டது என்று ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இரங்கல்: இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT