உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் ராமசேஷா என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடையில் தேநீர் அருந்திய 21 பேர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தேநீர் விஷமாக மாறியதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் உடல்நலன் மேலும் மேசமடைந்தது.
இதையடுத்து அந்த 21 பேரும் உடனடியாக வாரணாசி அவரச சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த வாரமும் அதே கடையில் தேநீர் அருந்திய 27 பேர் இதேபோன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்த இந்த அதிர்ச்சி சம்பவங்களால் ஔரோரா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அந்த தேநீர் கடையை நடத்தி வரும் ராமசேஷா அங்கிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.