இந்தியா

சத்தீஸ்கரில் மோதல்: நக்ஸல் சுட்டுக்கொலை

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில், நக்ஸல் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கேர் மாவட்ட வனப்பகுதியில் சிலர் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து அப்பகுதியில் திங்கள்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், நக்ஸல்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். இதில் ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டார். நக்ஸல்கள் விட்டுச் சென்ற துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
தப்பியோடிய நக்ஸல்களைப் பிடிக்க போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். முன்னதாக, ராஜ்நந்த்காவ் மாவட்டத்தில் போலீஸாருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT