கர்நாடகாவில் பாஜக தலைவர் மர்மமரணம்
கர்நாடகா மாநிலம், பாலாரி மாவட்ட பாஜக தலைவர் பண்டி ரமேஷ் நேற்று இரவு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கர்நாடகா: கர்நாடகா மாநிலம், பாலாரி மாவட்ட பாஜக தலைவர் பண்டி ரமேஷ் நேற்று இரவு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாலாரி நகர பாஜக தலைவராகவும், எஸ்டி பிரிவு மாவட்ட துணைத் தலைவவராக இருந்து வந்த பண்டி ரமேஷ், அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நேற்று இரவு பண்டி ரமேஷ் கொல்லப்பட்டார்.
ரமேஷ் கடந்த சில நாட்களாக பல கிரிமினல் வழக்குகளை சந்தித்துவந்த நிலையில், அவர் நேற்று இரவு மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சூர்யா சிட்டி காவல் எல்லைக்குள், கடந்த மார்ச் 14 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் பாஜக உறுப்பினர் கிதகனஹள்ளி வாசு மர்ம நர்ம நபர்களால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.