இந்தியா

ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

தினமணி

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோளான ஜிசாட்-17, பிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து ஏரியான்-5 VA-238 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.29 மணிக்கு ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 41வது நிமிடத்தில் ஜிசாட் 17 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்தது. இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் ஆகும்.

இதுவரை நாம் அதிகபட்சமாக 3.2 டன் கொண்ட செயற்கைக்கோளைத்தான் விண்ணில் செலுத்தியிருக்கிறோம். ஜிசாட்-17 அதற்கு மேல் எடைகொண்ட செயற்கைக்கோள் என்பதால் ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 477 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT