உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் பனிலிங்க யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 29) துவங்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, உதம்பூர் பஹல்காம் மற்றும் பால்ட்டால் வழிப்பாதையிலான அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
சாலையில் படிந்துள்ள பாறைகளை அகற்றும்பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விரைவில் இப்பகுதியில் யாத்திரை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.