திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்
ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாள்களாக சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் "ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதலால் பல்வேறு கணினி செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்த வைரஸை ஏவி விட்டது யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வட கொரியாவுக்கு ஆதரவாக செயல்படும் லாசரஸ் இணையவழி ஊடுருவல் கும்பல் இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்குதலால் கணினியில் வைக்கப்பட்டிருந்த நிர்வாக விவர கோப்புகள் அனைத்தும் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரஸ் தாக்குதலால் பக்தர்களின் தரிசனத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேவஸ்தானம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.