முகப்பு
இந்தியா

இந்தியப் பெண் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய பாக்., பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கு முடக்கம்

தவறான வாசகத்துடன் இணைத்து இந்திய பெண் புகைப்படம் பயன்படுத்திய காரணத்துக்காக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

Updated On : 19 நவம்பர், 2017 at 2:48 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்துடன் தவறான வாசகங்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் அந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது.

இதன்காரணமாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.

Advertisement

அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் தனது நிஜப் புகைப்படத்துடன் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ட்விட்டர் கணக்கில் பயன்படுத்தப்பட்ட போலி வாசகம் அடங்கிய புகைப்படத்தை அந்தப் பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.