இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.