முகப்பு
இந்தியா

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப் படி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கில் எதிர் மனுதாரரான தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்யலாம் என்று பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய ஏதுவாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →