முகப்பு
இந்தியா

காஷ்மீரீல் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதிகள் 2 பேர்

Updated On : 11 செப்டம்பர், 2017 at 8:09 AM
பகிர்:

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே உள்ள குத்வாணி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று அதிகாலையிலேயே அந்த கிராமத்தை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தாவூத் அகமத் அலி மற்றும் ஷைஹார் அகமத் வாணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹரிப் சோபி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு ஏகே47, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.