இந்தியா

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன்மூலம்,  பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கபப்ட்டது.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: குப்வாரா மாவட்டம், மாச்சில் பகுதியில் சனிக்கிழமை சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருந்ததை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டனர். இதையடுத்து, அவர்களை ஊடுருவ வேண்டாம் என்று வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றனர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT