FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும்: சொன்னது யார் தெரியுமா? 

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார். 

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 2:15 pm IST
பகிர்:

ஹைதராபாத்: நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி மோடி அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மனத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது மோடி அரசின் மீது கடுமையான குற்றசாட்டுகளை வீசிய ராகுல், தனது பேச்சின் முடிவில் அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை கட்டியணைத்தார். பின்னர் ராகுல் இருக்கைக்குத் திரும்பும் பொழுது மோடி அவருக்கு கைகொடுத்து வாழ்த்தினார். பின்னர் தனது இருக்கைக்குச் சென்றவர், காங்கிரஸ் எம்.பியான ஜோதிராதித்ய சிந்தியாவைப் பார்த்து கண்ணடித்த காட்சி இந்தியா முழுக்க வைரலாகப் பரவியது.

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் உவைஸி தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். அதன் நிறுவனத் தலைவரான அசாதுதீன் உவைஸி செய்தியாளர்களிடம் திங்களன்று கூறியதாவது:

மோடி அரசுக்கு எதிராகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ராகுல் தனது பேச்சின் முடிவில் யாருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ அந்த மோடியை சென்று கட்டியணைக்கிறார்.

நான் மட்டும் மோடிக்கு கை கொடுத்திருந்தால் எனக்கு எதிராக 'பத்வா' விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராகுல் மோடியை கட்டி அணைத்துள்ளதை பற்றி, காங்கிரசார் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments