இந்தியா

புடவை அணிந்து 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த 4 திருநங்கைகள்

IANS

சபரிமலை: புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

கடந்த ஞாயிறன்று சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளும், புடவை அணிந்துகொண்டு சபரிமலை வந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தின் காரணமாக நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை எருமேலி வந்த 4 பேரும், 8 மணியளவில் பம்பையில் இருந்து தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்கினர்.

காலை 9.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 4 திருநங்கைகளும் 18ம் படி ஏறி, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து தங்களது சபரிமலை பயணத்தை நிறைவு செய்தனர். இவர்களுக்கு எங்குமே இடையூறு ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT