குழந்தை விற்கும் கும்பல் கைது: 2 நாள் குழந்தை மீட்பு
குழந்தை விற்கும் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாள் குழந்தையும், தாயும் மீட்கப்பட்டனர்.
குழந்தை விற்கும் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாள் குழந்தையும், தாயும் மீட்கப்பட்டனர்.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே மல்கஜ்கிரி எனும் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு குழந்தைகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரகசிய சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாத தம்பதிகளிடம் பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு குழந்தைகளை விற்று வந்த 4 பேர் கும்பல் செவ்வாய்கிழமை பிடிபட்டனர். மேலும் அந்த கும்பலிடம் இருந்து 2 நாள் குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் மீட்கப்பட்டனர்.
Advertisement
இவ்விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் எனும் பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவரின் கார் ஓட்டுநர் சையது ஷானவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் முகமது இப்ராஹிம், ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.