திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி: நண்பர்களுக்கு தர்ம அடி! (விடியோ இணைப்பு)
திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த அவரது நண்பர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கான்பூர்: திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த அவரது நண்பர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் புதனன்று திருமணம் ஒன்று அங்குள்ள மண்டபத்தில் நடந்துள்ளது. திருமணம் நிறைவு பெற்றதும் தம்பதிகள் ஜோடியாக நிற்க, உறவினர்களும் நண்பர்களும் சென்று வாழ்த்துக் கூறி, பரிசுப் பொருட்களை அளித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது மணமகளின் நண்பர்கள் சிலர் அவரோடு நின்று செல்பி எடுத்துக் கொள்ள முயன்றனர். அவர்களில் சிலர் மணமகளுடன் நெருக்கமாக நின்றனர். இதனால் மணமகன் விட்டார் ஆத்திரமடைந்தனர்.
Advertisement
அவர்களில் சிலர் குறிப்பிட்ட நண்பர்களை ஒன்று சேர்ந்து தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. பின்னர் மற்றவர்கள் அவர்களை விடுவித்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடியோ: