இந்தியா

பி.என்.பி வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடி: வெளியானது 'பகீர்' தகவல்! 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது.  

IANS

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது.  

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கடந்த 14-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடியின் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாம்பே பங்கு வர்த்தக நிறுவனத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் திங்களன்று இரவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இத்தனையும் சேர்த்து நிரவ் மோடி மொத்தமாக ரூ. 12723 கோடி பணத்தினை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இதன் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளின் விலையானது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயருக்குத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்

VinFast நிறுவனத்தின் முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர் Stalin

SCROLL FOR NEXT