ஒரு நிமிடத்தில் இந்திய தலைநகரங்களைக் கூறி அசரவைத்த 2 வயது குழந்தை!
ஹரியாணாவைச் சேர்ந்த 2 வயது குழந்தை இந்திய தலைநகரங்களை ஒரு நிமிடத்தில் கூறி அசரவைத்த விடியோ வைரலாகி வருகிறது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:42 PM
ஹரியாணாவைச் சேர்ந்த 2 வயது குழந்தை இந்திய தலைநகரங்களை ஒரு நிமிடத்தில் கூறி அசரவைத்த விடியோ வைரலாகி வருகிறது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள பஞ்சுக்லா எனுமிடத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை அமைரா குலாடி, இந்திய மாநிலங்களின் அனைத்து தலைநகரங்களையும் சரியாகக் கூறிய விடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு, பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த விடியோவில் ஒவ்வொரு மாநிலங்களைக் கூறும்போதும் குழந்தை அமைரா, அதன் தலைநகரங்களை மழலை மாறாமல் கூறியது அசரவைக்கும் விதமாக அமைந்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் ஒரு நிமிடத்தில் சரியாகக் கூறிய அமைரா, உலக சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement