இந்தியா

கஜகஸ்தான் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

DIN

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்ற மற்ற நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அவர், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ், தஜிகிஸ்தான் அதிபர் எமோமலி ரஹ்மோன், கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவை ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதில், கஜகஸ்தான் அதிபரை சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு மோடி அழைப்பு விடுத்தார். 

சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பில் என்பது 2015-ஆம் ஆண்டு எரிபொருள் பயன்படுத்துதலை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட கூட்டமைப்பாகும். 

மோடியின் இந்த அழைப்புக்கு கஜகஸ்தான் அதிபர் நேர்மறையான பதில் தந்ததாக வெளியுறவுத் துறை செயலாளர் (மேற்கு) ருச்சி ஞானஷ்யாம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம்

கர்நாடகத்தில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

நானும் ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல! -சுதர்சன் ரெட்டி

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

யாருக்கு ஆதரவு? முதல்வர் ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் - கமல்ஹாசன்

SCROLL FOR NEXT