இந்தியா

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு புதிய முறை: மத்திய அரசு

நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் பேராசிரியர்கள் பணி உயர்வுக்கு என புதிய முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்கு என்று புதிய முறை ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக, இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணி மூப்பு மற்றும் ஆராய்ச்சி நூல்கள் வெளியீடு ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கும் முறை கையாளப்பட்டு வந்தது.

இனி அதற்குப் பதிலாக புதிதாக தேர்வு முறை ஒன்றினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் இருக்கும் முறையானது முற்றிலுமாக கைவிடப்பட உள்ளது. இந்தப் புதிய முறை வரும் 2022-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மிதுனம்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

பர்கானுடன்... ராஷி கன்னா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT