FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு மன்னிப்பு கோருமா பாஜக? - காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி

4 ஆண்டுகள் அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு பாஜக மன்னிப்பு கோருமா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கேள்விஎழுப்பியுள்ளார்.

Updated On : 26 ஜூன் 2018, 4:34 pm IST
பகிர்:

இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தி நேற்றுடன் (செவ்வாய்கிழமை) 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை, பாஜக கட்சியினர் இந்தியாவுக்கு ஏற்பட்ட கறை என்று பல குற்றச்சாட்டுகளை நேற்று முதல் சுமத்தி வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,  

"4 ஆண்டுகளுக்குப் பிறகு 2019 தேர்தலின் தோல்வி பயம் அரசை உலுக்குகிறது. அதனால் தான் 1975 அவசர நிலையை வைத்து அடைக்கலம் தேடுகின்றனர். ஆனால், 1977-இல் இந்திரா காந்தி மன்னிப்பு கோரினார், தவறுகளை திருத்திக்கொண்டார், மேலும் மக்களும் அவருக்கு திருப்பி வாக்களித்தனர். 

Advertisement

Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு பாஜக மன்னிப்பு கோருமா? மக்கள் பயமுறுத்தப்பட்டனர், விசாரணையின்றி கொல்லப்பட்டனர், ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்பட்டன, பொருளாதார சுதந்திரங்களுக்கு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது."

இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments