இந்தியா

ராணுவத்துக்கு எதிராக கருத்து? குலாம் நபி ஆசாத் மீது தேச துரோக புகார்

DIN

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராணுவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்கறிஞர் சசி பூஷண் அளித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவின்படி, குலாம் நபி ஆசாத் மீது இந்திய குற்றவியல் பிரிவு 124 (தேச துரோகம்), 120பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் 505(1) (ராணுவம்/கடற்படை/விமானப்படை அதிகாரி குறித்து வதந்திகளை பரப்பி கலகத்தை உண்டாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வழக்கு நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

வழக்கறிஞர் அளித்த புகாரின்படி, ஜூன் 22-ஆம் தேதி குலாம் நபி ஆசாத், 'காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகளைவிட நிறைய அப்பாவி மக்களையே ராணுவம் கொலை செய்கிறது' என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT