இந்தியா

வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை திருமணத்தன்று குத்திக் கொன்ற தந்தை

DIN


திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்ற பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொள்வதைப் பிடிக்காத தந்தை அவரை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரத்தைச் சேர்ந்த ஆதிரா, ராணுவத்தில் பணியாற்றும் பிரிஜேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். பிரிஜேஷ் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு  பெற்றோர் மறுத்துள்ளனர். எனவே திருமணம் செய்வதற்காக ஆதிரா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிறகு, ஆதிராவை சமாதானம் செய்த பெற்றோர், பிரிஜேஷுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இருவருக்கும் மார்ச் 23ம் தேதியான இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருமண ஏற்பாடுகளை செய்ய, ஆதிராவின் தாய் மற்றும் சகோதரர்கள் நேற்று வெளியே சென்றிருந்தனர்.

அப்போது, ஆதிராவுக்கும், அவரது தந்தை ராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜன் ஆதிராவைத் தாக்க, ஆதிரா அங்கிருந்து தப்பித்து பக்கத்து வீட்டுக்கு ஓடியுள்ளார். அங்கேயும் விரட்டிச் சென்ற ராஜன், சமையலறையில் இருந்த கத்தியால் ஆதிராவின் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். காயமடைந்த ஆதிராவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அவரது இதயத்தில் கத்திக் குத்தப்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மகளைக் கொன்ற ராஜன் கைது செய்யப்பட்டார். திருமணத் தேதி குறிக்கப்பட்ட நாளில், ஆதிராவின் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

வேறு ஜாதியைச் சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொள்வதைப் பிடிக்காத தந்தை, திருமணம் நடைபெறவிருந்த சமயத்தில் மகளைக் குத்திக் கொன்றிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT