திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி
ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
ஏழுமலையானை தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார்.
திருமலைக்கு வந்த அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு மலர்ச் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தார் (படம்). சிறிது நேர ஓய்விற்குப் பின், அவர் ஏழுமலையான் கோயில் அருகில் திருக்குளக்கரையில் எழுந்தருளி உள்ள வராக சுவாமியை தரிசித்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலையில் அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.