ராய்பூர்: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சட்டீஸ்கரில், மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 4 பேர் பலியாகினர்.
சிஐஎஸ்எஃப் படை வாகனத்தை குறி வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் எதிர்பாராதவிதமாக சிறிய பேருந்து சிக்கியதில் படை வீரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். 2 வீரர்கள் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை சட்டீஸ்கர் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு வாரங்களாக சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.