திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?
மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்று, திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெறும்பூர் தொகுதி, தொடர்ச்சியாக நான்காவது முறை, மிகக் குறைந்த வாக்குப்பதிவுகளுடன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
திருச்சி மாவட்டத்துக்குள் அமைந்துள்ள ஒன்பது தொகுதிகளில் திருவெறும்பூர் மட்டும் எப்போதும் குறைந்த வாக்குப்பதிவுகளுடன் தேர்தலை நிறைவு செய்து வருகிறது.
இங்குள்ள இளம் தலைமுறையினர் அனைவரும் வெளிநாடுகளில் படித்து, வேலை செய்து வருவதாலும், வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு அதிகமானவோர் வாழ்ந்து வருவதாலும், தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
2021ஆம் ஆண்டு 67 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு, 2026 தேர்தலில் 81 சதவிகிதமாக உயர்ந்திருந்தாலும் மற்ற தொகுதிகளைக் காட்டிலும் திருவெறும்பூரில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.
நகரங்கள், கிராமங்கள் என எண்ணிக்கையில் சமமாகக் கொண்ட திருவெறும்பூரில் நகரப் பகுதிகளில் தேர்தல் களைகட்டவில்லை.
மேலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தேர்தல் நாளன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பலரும் வாக்குப்பதிவு நேரத்துக்குள் சொந்த ஊர் செல்ல முடியாமல் நேர்ந்ததாகவும், அதனால் குறிப்பிட்ட வாக்குசதவிகிதம் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.