இந்தியா

சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு மனு

DIN


புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு அளித்தத் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், சபரிமலைக்கு பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.

தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை ஜனவரி 22ம்  தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி தேவசம்போர்டு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT