இந்தியா

ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதிதானா?: பாஜகவுக்கு சிவசேனா கேள்வி

ANI

மும்பை: ராமர் கோவில் கட்டுவோம் என்பது வெற்று வாக்குறுதிதானா என்று பாரதிய ஜனதா கட்சிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக செவ்வாயன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பதைப் போல, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதும் வெற்று வாக்குறுதிதானா? இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று நாம் நிஜமாகவே நம்புகிறோம்.

குறிப்பாக இந்த விஷயமானது தேர்தல்கள் வரும்போது மட்டுமே பேசப்படுகிறது; பின்னர் மறக்கப்பட்டு விடுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக கடந்த மாதம் 18-ஆம் தேதியன்று உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும் போது, நவமபர் 25-ஆம் தேதியன்று அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT