மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம்: மாற்றி யோசிப்பாரா ராகுல்?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த கால பிரசாரங்களிலும் சரி, தற்போதைய பிரசாரத்திலும் சரி, அவர் மோடி அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்தும் கடுமையாக சாடி வருகிறார்.
மத்திய அரசின் குறைகளைச் சொல்லி, ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பது ஒரு உக்திதான். ஆனால் தொடர்ந்து அதையே கையாண்டு வருவது பலனளிக்குமா?
மக்களின் தேவை என்ன? அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த செய்ய வேண்டிய திட்டங்கள் என்ன? காங்கிரஸ் என்ன செய்யும்? எதைச் செய்யாது என்ற பட்டியல்களையும் ராகுல் தொகுத்து, சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது சொல்வதுதானே மக்கள் மனங்களைக் கொள்ளையடிக்கும் சிறந்த வழியாக இருக்கும்.
இன்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்துக்கு ராகுலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளார்கள். இவர்களுக்கு ரஃபேல் போர் விமான முறைகேடும், அம்பானியும், நீரவ் மோடியும் யாரென்றே தெரியாது. இந்த நிலையில் மாற்றி யோசிப்பாரா ராகுல். மத்தியப் பிரதேசத்துக்கு என்னத் தேவை? என்ன செய்யப் போகிறோம் என்பதைத்தான் இங்கு சொல்லியாக வேண்டும்.