வேகமும், முன்னேற்றமுமே எங்கள் இலக்கு: மிசோரம் மக்களிடம் மோடி பேச்சு
மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
மிசோரமை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநிலத்தில் லஞ்சம் அதிகரித்ததோடு, வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
மிசோரமில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லஞ்சம் தாண்டவமாடிய காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க மக்கள் முன்பு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாஜக ஆட்சிதான். எனவே மிசோரம் மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்.
வேகமும், முன்னேற்றமுமே பாஜகவின் ஒரே இலக்கு. மத்திய அரசு, மிசோரமுக்கு நிதி ஒதுக்கினாலும், அதனை மாநில மக்களுக்காக செலவிடுவதைப் பற்றிக் கூட காங்கிரஸ் அரசு கவலைப்படுவதில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.