இந்தியா

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா?: கேள்வி எழுப்பும் சபாநாயகர் 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ANI

ராஞ்சி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 'லோக் மந்தன்' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியாதவது:

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட  ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்திய அரசியலை அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவரான அம்பேத்கர் கூட, இடஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டால் போதும் என்றுதான் தெரிவித்தார். 

அதற்குள் நாட்டில் ஒரு சரிசமமான வளர்ச்சி உருவாகும் என்றவர் கணித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது வரை கூட நாடாளுமன்றத்தில் உள்ளவர்களால் இட  ஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு ஒரு முறை அடுத்த 10 வருடங்களுக்கும் நீட்டிக்கபப்டுகிறது.    

இட  ஒதுக்கீடு என்பது மட்டுமே மக்களை மேம்படுத்தவோ அல்லது நாட்டின் சமூக பொருளாதார நிலையையோ மாற்றி விட முடியாது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT