வாஜ்பாய் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினர்களை மோடி சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் அவர்களுடன் அவர் கலந்துரையாடவும் செய்தார்.
இந்த சந்திப்புத் தொடர்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், வாஜ்பாய் குடும்ப உறுப்பினர்களுடன் தாம் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் மோடி வெளியிட்டிருந்தார். தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், தில்லியில் முழு அரசு மரியாதையுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.