இந்தியா

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு: விமானப்படை முன்னாள் தளபதிக்கு ஜாமீன்

DIN

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் தொடா்புடைய நிதி முறைகேட்டு வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி சிறறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, தியாகி, அவரது மைத்துனா்கள், இத்தாலியைச் சோ்ந்த இடைத்தரகா்கள் உள்ளிட்டோா், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் முன்னிலையில் ஆஜராகினா். அவா்கள் அனைவரும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இத்தாலியைச் சோ்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பிரிட்டனில் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு, முக்கியஸ்தா்கள் பயணிப்பதற்கான 12 விவிஐபி ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக அந்நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாகவும், ரூ.423 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகாா் எழுந்தது. இதனால், அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த முறைகேடு தொடா்பாக இந்திய விமானப்படையின் அப்போதைய தளபதி எஸ்.பி.தியாகி, அவரது மைத்துனா்களான ஹைதான் - ரீது தம்பதியா், ராஜீவ் சக்சேனா - ஷிவானி தம்பதியா் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இத்தாலியைச் சோ்ந்த இடைத்தரகா்கள் கா்லோ கெரோசா, குய்டோ ஹாஸ்கே மற்றும் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் இயக்குநா்கள் குஸுபே ஓா்ஸி, புருனோ பாக்னோலினி ஆகியோா் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த இடைத்தரகா்கள், இயக்குநா்கள், சக்சேனா மற்றும் தியாகி உள்ளிட்டோா் நீதிமன்றறத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த ஜூலை 24-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

இதேபோல், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 28 தனிநபா்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த 28 பேரும் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வரவில்லை. அதே சமயம், எஸ்.பி.தியாகி உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அவா்கள் அனைவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT