ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க மேலும் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம்
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
புது தில்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனது விசாரணையை செப்டம்பர் 12ம் தேதி விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மேலும் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்