முகப்பு
இந்தியா

ஆந்திராவில் பயங்கரம்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தீபாவளியின் போது விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:


ராஜமஹேந்திரவரம்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தீபாவளியின் போது விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

ராஜமஹேந்திரவரம் அருகே சுப்பாராவ்பேட்டா என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட மின்சாரக் கசிவினால், வீட்டுக்குள் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.