முகப்பு
இந்தியா

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளது குறித்து...

Updated On : 28 மார்ச், 2026 at 1:25 PM
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்... - எக்ஸ்
பகிர்:

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜி7 கூட்டத்தின் இடையே பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானை கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வளைகுடா போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியுள்ளார்.

மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

summary

External Affairs Minister S Jaishankar has met and held talks with French President Emmanuel Macron.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.