இந்தியா

பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு - ராணுவ தலைமைத் தளபதி

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பதால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். 

DIN

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பதால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.   

இதுதொடர்பாக, அவர் பேசுகையில், 

"பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பது அரசின் கொள்கை. அதனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்திய அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. இதனை பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்திவிட்டோம். 

மற்ற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எங்களது மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருகின்றனர். நாங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்பதை தங்களது நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதை அரசு தான் முடிவு செய்யும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடைபெறாது என்பதால் அரசு நல்ல முடிவை தான் எடுத்துள்ளது என்று எண்ணுகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

முன்னணி பான் மசாலா குடும்பத்தின் மருமகள் தற்கொலை!

SCROLL FOR NEXT