குவகாத்தி: கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த ஆண்டு அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் 10 மடங்காக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, கடந்த 2017-18ம் ஆண்டில் நடந்த குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2015-16ல் 32 ஆகவும், 2016 - 17ல் 96 ஆகவும் இருந்ததாகவும் தெரிவித்தார்.
அஸ்ஸாமில் காம்ரூப் மாவட்டத்தில்தான் 2017-18ல் 59 குழந்தைத் திருமணங்களும், 2016-17ல் 21 குழந்தைத் திருமணங்களும் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.